fbpx

வெற்றிகரமான சந்திராயன் 3 பயணம்… பிரதமர் மோடி வாழ்த்து…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவிற்க்கான பயணத்தை தொடங்கியது சந்திராயன் 3 என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும் ஆகஸ்ட் 23 அன்று நிலவில் சாப்ட் லாண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 3 வெற்றி பெற்றால் இந்தியா நிலவில் வெற்றி கொடியை நாட்டும், இதனால் நிலவில் வெற்றி கோடி நாட்டிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில்”சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக உயர்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் ஆன்மாவிற்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன்!” என்று கூறியிருக்கிறார்.

Kathir

Next Post

சினிமாவில் இருந்து ஃபீல்டு அவுட் ஆனாலும் இது கை கொடுக்கும்..!! பிசினஸில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பிரபலங்கள்..!!

Fri Jul 14 , 2023
பல சினிமா பிரபலங்கள் நிரந்தரமான வருமானத்திற்காகவும், மார்க்கெட் போனால் என்ன செய்வது என்ற பயத்திலும் பல சைடு பிஸ்னஸ்களை செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரசிகர்குக்கு இது பெற்றி தெரியாது. பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி என பலரும் ஹோட்டல் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அதே போல தான் பல தமிழ் சினிமா பிரபலங்களும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். சினிமாவில் நிரந்தர வருமானம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் ஃபீல்டு […]

You May Like