fbpx

#கள்ளக்குறிச்சி: பிரசவ வலியால் மருத்துவமனையில் சேர்த்த பெண் திடீரென இறந்த சம்பவம்.. சந்தேகத்தில் குடும்பத்தினர்..! 

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) எனபவர் தனது மனைவி சினேகாவுடன் (21) வசித்து வருகிறார். 

செல்வக்குமார் மற்றும் சினேகா தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகா சென்ற 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நேற்றைய தினத்தில் காலை 7.30 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் சினேகாவை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மாலை 3:20 மணிக்கு பிரசவ வலி கூடுதலாக ஏற்பட்டுள்ளது. மேலும் சினேகாவுக்கு திடீரென வலிப்பு மற்றும் இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் கூறியுள்ளனர். 

இந்த செய்தியை கேட்ட கணவர் தன்னுடைய மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை நடத்த வேண்டும் என்று  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

#திண்டுக்கல்: மிஸ்டு கால் நம்பி வாழ்க்கையை இழந்த இளம்பெண்.. நெருக்கமாக இருந்து விட்டு மாயமான திருமணமான நபர்..! 

Fri Jan 13 , 2023
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு […]

You May Like