fbpx

திடீரென தடுமாறிய கால்..!! தலையில் பலத்த காயம்..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த ஸ்டேஷன் மாஸ்டர்..!! பணி செய்யும் இடத்தில் பரிதாபம்..!!

மதுரை அருகே ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர் (32) என்பவருக்கு திருமணமாகி 4 மாத கைக் குழந்தை உள்ளது. இவர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். விடுமுறை கிடைக்கும்போது குடும்பத்தை பார்க்க கேரளா செல்வார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12 மணிக்கு அவருக்கு பணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், செங்கோட்டை – ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, அந்த ரயிலில் ஏற முயன்ற அனுசேகர், திடீரென கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அனுசேகர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுசேகரின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேஷன் மாஸ்டர், அதே ரயில் நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!! வெளியானது மருத்துவ அறிக்கை..!! என்ன ஆச்சு..? கவலையில் தொண்டர்கள்..!!

English Summary

The tragic incident of a station master falling and dying while trying to board a train near Madurai has caused a stir.

Chella

Next Post

அடுத்தடுத்த 3 பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்பு!. பயங்கரவாத தாக்குதலா? இஸ்ரேலில் பதற்றம்!

Fri Feb 21 , 2025
Series of explosions on 3 consecutive buses!. Terrorist attack? Tension in Israel!

You May Like