fbpx

உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது…! மத்திய அரசு விளக்கம்…!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த உணவு தானியங்களின் கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீஃப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை நல்ல அளவில் பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’தீபாவளிக்கு சூப்பர் பரிசு’..!! ’2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்’..!! வாகன ஓட்டிகளுக்கும் ஒரு குட்நியூஸ்..!!

Tue Oct 18 , 2022
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், சிஎன்ஜி மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் ஆகியவற்றின் […]
கேஸ் சிலிண்டர்களுக்கான சலுகை ரத்து..!! ஹோட்டல்கள், டீக்கடைகளில் விலை உயரும் அபாயம்..!!

You May Like