இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees’ Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக ஐஏஎஸ் , குரூப் 1, வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் இதர தேர்வுகளோடு ஒத்து போவதால், EPFO அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும், குரூப் 1, ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இதில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
* Enforcement officer/ Accounts officer (418) 30
* Assistant Provident Fund Commissioner (159) 35
வயது வரம்பு:
* Enforcement officer/ Accounts officer – 30
* Assistant Provident Fund Commissioner – 35
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் சமர்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 25ஆம் தேதியில் இருந்து தொடங்கும் எனவும் இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, கடைசி தேதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை யுபிஎஸ்சி அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்படும்.