fbpx

மாதந்தோறும் ரூ.12,000-க்கு மேல் வருமானம் பெற வேண்டுமா..? அப்படினா இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்கின்றனர். ஆனால், ஏதாவது ஒன்றில் பெரிய ரிஸ்க் இருக்கிறது. ஆனால், விவரமானவர்கள் ரிஸ்க் இல்லாத வகையில் இருக்கும் எல்.ஐ.சி. அல்லது போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். சில தனிநபர்கள் குறிப்பிட்ட மாத வருமானத்தை உறுதி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். எல்.ஐ.சி. வழங்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று ஓய்வு பெற்றவுடன் உத்தரவாதத் தொகையை மாதந்தோறும் வழங்குகிறது.

எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதியத் திட்டம் : எல்.ஐ.சி. சாரல் பென்ஷன் திட்டம் என்பது ஓய்வுபெற்றவுடன் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இதற்கு ஒரு முறை முதலீடு மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இது நிலையான ஒரு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதோடு, ஓய்வுக்குப் பிந்தைய முதலீட்டு திட்டமாகவும் விளங்குகிறது.

நீங்கள் தனியார் துறையில் பணிபுரிந்தாலும் அல்லது அரசு துறையில் பணிபுரிந்தாலும் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியப் பலன்களை அனுபவிக்க ஓய்வுபெற்றவுடன் உங்களது பி.எஃப். நிதி மற்றும் பணக்கொடை ஆகியவற்றை இதில் முதலீடு செய்யலாம். எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதியத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் இதில் முதலீடு செய்ய முடியாது. இருப்பினும், 80 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாயை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் காலாண்டுக்கு ரூ.3,000, அரையாண்டுக்கு ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும்.

மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் எப்படி? : இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்த வேண்டும். முதலீட்டுக்கு உச்சவரம்பு எதுவுமில்லை. நீங்கள் விரும்பும் அளவுக்கு முதலீடு செய்யவும், விகிதாச்சார ஓய்வூதியப் பலன்களைப் பெறவும் அனுமதி உண்டு. ஒரு பிரீமியம் செலுத்திய பிறகு உங்கள் ஓய்வூதியத்தை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் பெறலாம். குறிப்பாக, 42 வயதுடைய ஒருவர், ஒரே நேரத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு மாத ஓய்வூதியம் ரூ.12,388 கிடைக்கும்.

இந்த எல்.ஐ.சி. திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. குடும்ப உறுப்பினர் கடுமையான நோய்வாய்ப்பட்டால், பாலிசி தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் சரண்டர் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அல்லது பாலிசி தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்குப் பிறகு அதில் கடன் பெறலாம். எனவே, ஓய்வூதிய பெறுவதற்கு ஒரு சரியான திட்டமாக எல்.ஐ.சி. சாரல் பென்ஷன் திட்டம் இருக்கிறது.

Read More : “யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை”..!! விஜய்யின் அரசியல் குறித்து செந்தில் பாலாஜியின் ரியாக்‌ஷன்..!!

English Summary

Some individuals invest in pension plans to ensure a fixed monthly income. LIC One such scheme that offers a monthly guaranteed sum upon retirement.

Chella

Next Post

விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இந்த முறையும் எஸ்கேப் ஆன தனுஷ்..!! என்னதான் பிளான்?

Thu Nov 21 , 2024
Aishwarya Rajinikanth appeared in person at the Chennai Family Welfare Court today (November 21) in the divorce case with Dhanush.
மீண்டும் இணைந்த ஜோடி..!! ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்..!! வீடியோ வைரல்..!!

You May Like