பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு உற்சாகமாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது படம் குறித்தும், படத்தில் உள்ளவர்களின் நடிப்பு குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ரஜினிகாந்த் தொலைபேசி உரையாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசி அழைப்பு தன்னுடைய நாளையும், வருடத்தையும் சிறப்பாக்கியதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னிடைய திரைப்பயணத்திற்கு புது அர்த்தம் கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்வதாக நடிகர் ஜெயம்ரவி தனது உற்சாகத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
நாவலைப் படித்தவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பாக வெளிவந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருப்பதால், அடுத்த பாகம் ரசிகர்கள் இன்னும் வியக்கும் வகையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.