fbpx

தி. நகர் கிளப்பில் ஹைடெக் விபச்சாரம்! பிரபல பாலியல் புரோக்கர் கைது!

சென்னையின் முக்கிய பகுதியான தி.நகர் பகுதியில் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பாலியல் புரோக்கரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை தி.நகரில் உள்ள நரசிம்மா சாலையில் அமைந்துள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அதிரடியாக சென்ற காவல்துறை தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியது. காவல்துறையின் தேடுதல் வேட்டையின்போது அங்கிருந்த வீடு ஒன்றில் ரகசியமாக ஹைடெக் விபச்சாரம் செய்து வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் பிரபல பாலியல் ப்ரோக்கரான திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த கார்த்திகேயன்(26) என்பவரை கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் இந்த இளைஞர் மெட்ராஸ் ரீகிரியேஷன் கிளப் உரிமையாளர் இளையராஜாவின் உதவியாளர் என தெரிய வந்திருக்கிறது. மெட்ராஸ் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்களுக்கு இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி அதன் மூலம்
தி.நகரில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வைத்து இவர்கள் விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கும்பலிடம் இருந்த இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன் தலைமையில் தலைமறைவாக உள்ள மெட்ராஸ் ரீகிரியேசன் கிளப்பின் உரிமையாளர் இளையராஜா மற்றும் பெண் புரோக்கர் பானு ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

உள்ளாடையில் மறைத்து வைத்து.. சினிமா ஸ்டைலில் 15,00,000 தங்கம் நூதனக் கடத்தல்! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Sat Feb 25 , 2023
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் மற்றும் இலங்கை நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கான சுங்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது […]

You May Like