கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. கேரள மக்கள் இந்த பண்டிகையி கொண்டாடி வருகிறார்கள். இன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில் “நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போமாக. பூக்கள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது” என்று பதிவிட்டுள்ளார்.