பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார். இன்று அவர் காலமானார். அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமரின் தாயாரின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. தாயாரின் இழப்புக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.