fbpx

பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்படவில்லை; ஜம்மு காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்!. அமித் ஷா !

Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மூன்று நாட்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக ஸ்ரீநகர் சென்ற அவர், 2023 ஆம் ஆண்டு தெற்கு காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஹுமாயூனின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, ஜம்முவில், கதுவாவில் உள்ள ‘வினய்’ எல்லை புறக்காவல் நிலையத்தில் பிஎஸ்எஃப் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா, வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து, கருணை அடிப்படையில் ஒன்பது பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார். இதையடுத்து ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர்களையும் சந்தித்தார். அப்போது அவர், “பாதுகாப்பு நிலைமை விரைவில் இயல்புக்குத் திரும்பும், மேலும் மாநில அந்தஸ்து உகந்த நேரத்தில் மீண்டும் வழங்கப்படும்,” என்று உறுதியளித்தார்.

ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா BSF-வின் (பாதுகாப்புப் படை) பங்கை பாராட்டினார். பாகிஸ்தானுடன் நடந்த போர்களில் இராணுவத்துடன் சேர்ந்து BSF முக்கியமான பங்கு வகித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அவர்கள் செலுத்திய பங்களிப்பு மிக முக்கியமானது.” BSF வீரர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி, அவர்களின் துணிச்சலும் தியாகமும் நாடு எப்போதும் நினைவில் வைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் BSF-க்கு தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும். இது இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமைப்படுத்த பயன்படும். அதன் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் எல்லையிலும் இந்த நடவடிக்கைகள் விரிவாக்கப்படும்,” என அமித் ஷா கூறினார். இந்த முயற்சிகள், எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான முக்கிய கட்டங்களாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் மேம்பட்ட அச்சுறுத்தல் கண்டறிதல், ட்ரோன் தொழில்நுட்பம், சுரங்கப்பாதை கண்டறிதல் மற்றும் உடனடி பதிலடி திறன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் அடங்கும்,” என்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தற்போது 26 வகையான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் BSF வீரர்களுக்கான சத்துப்பூரண உணவுகளும், விளையாட்டு கட்டமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன,” என தெரிவித்தார். இந்த முயற்சிகள், BSF படையினரின் செயல்திறன் மற்றும் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

“நரேந்திர மோடியின் தலைமையில், பயங்கரவாதத்தை தடுக்கவும், பிரிவினைச் சிந்தனையை முடிவுக்கு கொண்டு வரவும் முக்கியமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் பணி இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை, ஏனெனில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், அது இன்னும் முழுமையாக வேரறுக்கப்படவில்லை,” என அவர் தெரிவித்தார்.

Readmore: “டிரம்பின் வரி அறிவிப்புகளால்தான் இந்தியாவுக்கு ஆதாயம் உள்ளது”!. பியூஷ் கோயல் நம்பிக்கை!

English Summary

Terrorism has not been completely eradicated; Jammu and Kashmir will be given statehood at the right time! Amit Shah!

Kokila

Next Post

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு... ஏழை மக்கள் மீதான தாக்குதல்...! பாஜக கூட்டணி தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு

Tue Apr 8 , 2025
Cooking gas price hike of Rs. 50... An attack on the poor...! BJP alliance leader Ramadoss opposes

You May Like