fbpx

காஷ்மீரில் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..!! ராணுவ வீரர் வீர மரணம்..!!

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். கடந்த 9ஆம் தேதி காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 35 பேர் காயமடைந்தனர். பின்னர் நேற்று கத்துவா மாவட்டத்தில் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அளித்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில், நேற்றிரவு தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும், பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

Read More : அடிக்கடி Paracetamol மாத்திரை சாப்பிடுறீங்களா..? புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு உறுதி..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

An army soldier was shot dead in an attack on an army camp in Toda district.

Chella

Next Post

இட்லி, தோசை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..? விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Wed Jun 12 , 2024
Idli and dosa have been included in the list of foods that affect the biodiversity of the world and it has caused a shock.

You May Like