ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநகா தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் அங்கு ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 2வது நாள் சடங்கை முடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பகநாஹா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முதலில் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.