fbpx

5,000 காலி பணியிடங்கள்… வரும் 5-ம்‌ தேதி நடைபெறும் இலவச வேலைவாய்ப்பு முகாம்…!

தருமபுரியில் வரும் 5-ம் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். 05.10.2024 அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள். காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசமானதாகும். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, dpijobfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே, காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

The 5th free employment camp is going to be held in Dharmapuri.

Vignesh

Next Post

ஈரான் தாக்குதல்!. ஒளிந்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடும் வீடியோ வைரல்!

Thu Oct 3 , 2024
Video of Israel PM Netanyahu running to hide amid Iran attack misleading

You May Like