காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இன்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி அறிவித்துள்ளார். அதே போல செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.