எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று காலை 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.