fbpx

வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த சிறுமி..!! போலீசில் சிக்கியதும் மற்றொரு காதலனை மாட்டிவிட்ட காதலி..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், ”தனது காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, பணம், நகைகளை கேட்டான். இதனால், எனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்” என போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினரும் அந்த பெண் சொன்னது உண்மைதான் என நினைத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், அப்படி ஏதும் நான் நகை வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட பெண் தங்க நகையைக் கொடுத்ததாகச் சொன்ன நபர் அதை விற்பனை செய்யவில்லை. இதனால், அந்தப் பெண்ணிடம் மீண்டும் விசாரித்தோம். அப்போது, அந்தப் பெண் தன்னையும், தன்னுடைய காதலனையும் காப்பாற்றுவதற்காக நாடகமாடியதும், அவர் தனது வீட்டில் தங்க நகைகளைத் திருடி மற்றொரு காதலனிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

அந்த காதலன் பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை வாங்கி, ரூ.53,000-க்கு விற்பனை செய்துள்ளான். ஏனென்றால், அந்தப் பெண்ணுக்கும், அவரின் காதலனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வந்திருக்கிறது. இந்தப் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சொந்த வீட்டில் தங்க நகைகளைத் திருடி தனது காதலனிடம் கொடுத்திருக்கிறார். அதனை வாங்கிச் சென்ற 18 வயது காதலனும், அதை விலைக்கு வாங்கிய நகைக்கடைக்காரரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

குடிபோதையில் பலாத்காரம்..!! இளம்பெண்ணுக்கு HIV பாதிப்பு..!! சொகுசு கப்பலில் நடந்த சோகம்..!!

Thu Jan 12 , 2023
ஏல நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்ணை, சொகுசு கப்பலில் வைத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேன் டோ (27) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு ஜனவரியில் ஏல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணம் செய்துள்ளார். அவருடன் ஏல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பயணித்துள்ளனர். அப்போது, கப்பலில் பயணிகளுக்கு மது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதை இளம்பெண் ஜேன் […]

You May Like