fbpx

” இன்பச் செய்தி” தமிழக அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்படும்…! இவர்களுக்கு மட்டும் தான்… அமைச்சர் கே.என்.நேரு தகவல்…!

காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்‌.நேரு; தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பொழிந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொண்டு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சர் உத்தரவிட்டபடி, அனைத்து இடங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்; காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளது. இது குறித்து, தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து, நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மழையின் பாதிப்புகளை ஆராய்ந்து அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது எதிர்க்கட்சிகள் சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்தார்.

Vignesh

Next Post

#Lockdown: அதிகரிக்க தொடங்கிய கொரோனா... தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு...? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்..!

Sun Aug 7 , 2022
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்! தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வாராந்திர புதிய தொற்று பாதிப்பில் 7.7%-ஐ மாநிலம் […]
முதல்வர்

You May Like