fbpx

சிறுமி முதல் கல்லூரி மாணவிகள் வரை.. கை கால்களை கட்டி 28 பெண்கள் வன்கொடுமை..!! காம கொடூரனுக்கு மனைவியும் உடந்தை..

ஆந்திராவில் அழகாக போட்டோ எடுத்து தருவதாக அழைத்து 28 மாணவிகளை கட்டிப்போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூரில் மாணவிகள் தங்கும் தனியார் விடுதி உள்ளது. யர்ரகுண்டப்பள்ளியை சேர்ந்த சசிகுமார்(52) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இவரது 2வது மனைவி விடுதி வார்டனாகவும், மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர். இந்த விடுதியில் 45க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர்.

சசிகுமார் போட்டோ ஸ்டுடியோவும் வைத்துள்ளார். கடந்த 15ம்தேதி அங்குள்ள 3 சிறுமிகளிடம் பேசிய சசிகுமார், உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன், என்னுடன் வாருங்கள் என வற்புறுத்தி காரில் அழைத்துச்சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு சிறுமிகளின் கை, கால்களை கட்டி விடியவிடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதிக்கு கொண்டு சென்றுவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த 2 நாட்களாக கடும் மன உளைச்சலுடன் இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் ஏலூர் டிஎஸ்பி ஷ்ரவன்குமார், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அங்குள்ள அனைவரையும் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அந்த விடுதியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஆனால் அவரது மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து சசிகுமாரை தேடிவருகின்றனர்.

இதுதொடர்பாக டிஎஸ்பி அளித்த பேட்டி, தற்போது நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை காரில் அழைத்துச்சென்று கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அறை பூட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும். இந்த விடுதி அனுமதியில்லாமல் நடத்தி வந்துள்ளனர். கைது செய்யப்போவதை முங்கூட்டிய அறிந்த குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சசிகுமார் மற்றும் அவரது இரண்டு மனைவி, மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more ; சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்ணின் உடல்..! பதறும் தலைநகர்..!

English Summary

The incident in Andhra Pradesh where 28 female students were tied up and raped by a hostel administrator has created a stir.

Next Post

இதுதான் பிரச்சனைக்கு காரணம்..!! குறுக்கே வந்த திவ்யா துரைசாமி..!! வெடித்த பஞ்சாயத்து..!! வீடியோ வெளியிட்ட குரேஷி..!!

Thu Sep 19 , 2024
While Manimekalai had said that Priyanka was the reason behind her exit from Cook with Komali, Qureshi has released a video about what happened between the two.

You May Like