fbpx

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்..! இன்னும் ஒரு மாதத்திற்குள்..! சென்னை ஐகோர்ட் அதிரடி..!

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும் தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்..! இன்னும் ஒரு மாதத்திற்குள்..! சென்னை ஐகோர்ட் அதிரடி..!

கடந்த விசாரணையின்போது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது குறித்த திட்டத்தை வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் 71 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப ஒப்படைக்காததால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் உள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்..! இன்னும் ஒரு மாதத்திற்குள்..! சென்னை ஐகோர்ட் அதிரடி..!

மேலும், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதை பொறுத்தவரை, 5000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க 3 மாத அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்தில் இது சம்பந்தமான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதேசமயம், திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களே அந்த பாட்டில்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்கள் திரும்ப ஒப்படைக்காததால் வசூலாகியுள்ள தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Chella

Next Post

தர்மபுரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.. அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது…!

Fri Jul 15 , 2022
சென்னை, மாமல்லபுரத்தில் வருகிற 28- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை 44 வது செஸ் ஒலிம்பியாட், 2022 வருடத்தின் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு […]

You May Like