பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. சிலசமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்..
எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, நாசா விண்கற்களின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் 99 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான விண்கல், இன்று (பிப்ரவரி 25, 2023)பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வராது என்பதால் பூமிக்கு எந்த பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023 CG1 எனப்படும் அந்த விண்கல், தற்போது பூமியை நோக்கி நகர்கிறது மற்றும் இன்று கிரகத்தை நெருங்குகிறது.
இந்த விண்கல் கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் அளவு கொண்டது.. இது மணிக்கு 23,328 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது, மேலும் 5,820,000 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. அதே போல், 2023 DK என்று பெயரிடப்பட்ட மற்றொரு விண்கல் இன்று பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28-அடி நீளமுள்ள இந்த சிறுகோள், ஒரு பேருந்தின் அளவைப் போன்றது என்றும், அது 2,520,000 கிலோமீட்டர் தொலைவில் பூமியை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..