பாளையங்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பாலாமடையில் பேச்சி என்பவர் தனது மனைவி ஆறுமுககனி மற்றும் மகள் அருணா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். பேச்சி சென்னை மாநகர் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.
மகள் கோவையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கேட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். மேலும் இந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இளைஞர் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு கூறியுள்ளானர். அதனை சிறிதும் மதிக்காமல் மகள் அவரை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பிடிவாதமாக சண்டை போட்டுள்ளார்.
திடீரென பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் நேற்றைய தினத்தில் இரவில் தாய் மற்றும் மகளுக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது. சண்டையில் ஆத்திரமடைந்த தாய் அந்த பெண் அணிந்திருந்த ஷால் துணியால் கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்து விட்டார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தினால் வீட்டில் இருந்த மாத்திரைகள் மற்றும் ஹேர் டையையும் எடுத்து திடீரென குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து தாயை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சிகிச்சை பெற்று வருகிறார்.