fbpx

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பிளேடால் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்த தாய்……! காரணம் என்ன…..?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருக்கின்ற சல்லக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி அழுவதாலும், சரும நோய் காரணமாக, பாதிக்கப்பட்டு தவித்து வந்ததன் காரணமாகவும் விரக்தி அடைந்த ஜீவிதா குழந்தையை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

அதன் பிறகு தொட்டிலில் இறுக்கி குழந்தையின் கழுத்தில் இருந்து ரத்தம் வருவதாக தெரிவித்து, நாடகமாடி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்து விட்டனர். இது தொடர்பாக சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் வாடிப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜீவிதாவிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் ஜீவிதாவை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

மது போதையில் லோடு வேனை திருடி சென்று விபத்து ஏற்படுத்திய குடிமகனின் அட்டகாசம்…..! கடுப்பில் பொதுமக்கள்…..!

Sun Jul 30 , 2023
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கின்ற கிருஷ்ணா நகரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டரில் பணியாற்றும் பெண்கள் பணி முடிவடைந்ததும் சுமார் 7️ பெண்கள் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அந்த கார் குமாரபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே திருநெல்வேலி சாலையில் அரசு மதுபான கடை அருகே சிமெண்ட் விற்பனை செய்யும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த லோடு வேனை ஒரு […]

You May Like