கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மணிகண்டன் (30). இவரது தந்தையின் இரண்டாவது மனைவி திட்டக்குடி அருகே வசிஷ்டபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில், மணிகண்டனுக்கு தங்கை முறையான அவரை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மணிகண்டன்.
இதனால், தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அடிக்கடி மிரட்டி இது போன்ற செயலில் ஈடுபடுவதாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார். தங்கை என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.