காஞ்சிபுரத்தில் உள்ள மாடம் பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்ததுள்ளதை தொடர்ந்து ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர்.
இதனால் பெரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அரிவாளால் 6 பேர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் கொலை கும்பலை தேடி வருகின்ற நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.