fbpx

#காஞ்சிபுரம் : ஊராட்சி மன்ற தலைவர், சரமாரியாக வெட்டி படுகொலை..! குவிக்கப்பட்ட போலிசார்.!

காஞ்சிபுரத்தில் உள்ள மாடம் பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்ததுள்ளதை தொடர்ந்து ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர்.

இதனால் பெரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அரிவாளால் 6 பேர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் கொலை கும்பலை தேடி வருகின்ற நிலையில், பதற்றமான சூழல் நிலவுவதால் அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Baskar

Next Post

மீண்டும் தமிழகத்தை விரட்டும் மழை!! உருவாகின்றது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Fri Nov 18 , 2022
தென்கிழக்கு வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதிமுதல்மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like