fbpx

மின்சார பேருந்துகள், அவசர ஊர்திகள் வாங்க மாநில அரசுக்கு மானியம் கிடையாது…! மத்திய அரசு தகவல்…!

மின்சார பேருந்துகள், அவசர ஊர்திகள், மின்சார டிரக்குகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏதுவாக பிரதமரின் மின்னணுவாசன திட்டத்தின் இது வரை மாநில அரசுகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்சார பேருந்துகள், அவசர ஊர்திகள், மின்சார டிரக்குகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏதுவாக பிரதமரின் மின்னணுவாசன திட்டத்தின் இது வரை மாநில அரசுகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் பழைய, பயன்பாடற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கத்தொகைத் திட்டம் வாகன அழிப்புக் கொள்கை போன்ற கொள்கைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்காக கொள்கையின் கீழ், 05.10.2021 தேதி முதல் ஜி.எஸ்.ஆர் அறிவிப்பு 720 (இ) மோட்டார் வாகன வரியில் சலுகையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அல்லாத வாகனங்களாக இருந்தால் இருபத்தைந்து சதவீதம் வரை / போக்குவரத்து வாகனங்களாக இருந்தால் பதினைந்து சதவீதம் வரை வழங்கப்படும் என மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

English Summary

The state government does not have any subsidy to purchase electric buses and ambulances.

Vignesh

Next Post

கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்!. 22 வயது இந்திய மாணவர் கொலை!. ஒருவர் கைது!

Sun Dec 8 , 2024
Canada: கனடாவில் சமையல் அறையில் ஏற்பட்ட தகராறில் இந்திய வம்சாவளி மாணவரை, கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின் சர்னியா நகரில் உள்ள ஒரு வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குராசிஸ் சிங், 22, தங்கி இருந்தார். இவர், அங்குள்ள லாம்ப்டன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வணிக மேலாண்மை படித்து வந்தார்.இவருடன், ஹன்டர் என்பவரும் அதே அறையில் […]

You May Like