fbpx

#TRB: எல்லாரும் ரெடியா இருங்க.‌‌.. வரும் 22-ம் தேதி முதல்… ஆசிரியர் தேர்வு வாரியம் மிக முக்கிய அறிவிப்பு…!

வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 – 21-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பின்போது முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதிகளை தமிழ் வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் பொழுது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தமிழ் பயின்றதற்கான சான்று, 11 மற்றும் 12 -ம் வகுப்பு டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று, இளங்கலை பட்டத்தினை தமிழில் பயின்றதற்கான சான்று முதுகலை பட்டத்தினை தமிழில் பயின்தற்கான சான்று, கல்வியியல் இளங்கலை பட்டத்தினை பிஎட் தமிழ் பயின்றதற்கான சான்று கல்வியியல் முதுகலை பட்டத்தை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேல்லோப்பத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள படிவத்தில் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏற்கனவே தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை ஆம் என பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவே மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இந்த விபச்சினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும் இணையதளத்தில் உள்ள மாதிரி படிவங்களில் பெற்று வைத்துக்கொண்டு இணையதளத்தில் வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் இதற்குரிய இணையதள முகவரி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

Vignesh

Next Post

Tn Rain: 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று...! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை...!

Fri Aug 19 , 2022
மீனவர்கள் வரும் 22-ம் தேதி வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல நாளை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]

You May Like