fbpx

கள்ளக்காதலனுடனான உல்லாசத்திற்கு தடை போட்ட கணவர் தலைமீது, கல்லைப்போட்ட மனைவி….! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு….!

கணவன், மனைவி உறவு என்பது ஒரு புனிதமான உறவு. அதில் ஒருவர் மீது, ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அந்த நம்பிக்கை மட்டும் தான் அவர்களுடைய வாழ்வை கடைசிவரையில் சிதைக்காமல் வைத்திருக்கும்.

மேலும், அந்த நம்பிக்கை தான் அவர்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கும். அந்த நம்பிக்கை மட்டும் இருவர் பக்கமும் இருந்து விட்டால், கணவன், மனைவி உள்ளிட்ட இருவரும், கடைசி வரையில், மனமொத்த, ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்ட மானசீக தம்பதிகளாக வாழலாம்.

ஆனால் கணவரோ, மனைவியோ யாராக இருந்தாலும், ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை இன்னொருவர் சிதைக்கும் விதத்தில் நடந்து கொண்டால், அந்த நொடியில் இருந்து அவர்களுடைய வாழ்வு மங்கி போக தொடங்கி விட்டது என்று அர்த்தமாகும்.

அந்த வகையில் தான், ராணிப்பேட்டை பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் விநாயகமூர்த்தி, அமலா தம்பதியினர், காதலித்து, திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், விநாயகமூர்த்தியின் நண்பரான ரமேஷ் என்பவரோடு, அமலாவுக்கு முறை தவறிய உறவு இருந்துள்ளதாக தெரிகிறது. விநாயகமூர்த்தியும், ராமேஷும்,மிக நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, விநாயகமூர்த்தியின் வீட்டிற்கு ரமேஷ் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அமலாவுக்கும், ரமேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்பு இருவருக்கும் இடையே, அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

ஆகவே அமலாவின் கணவர் விநாயகமூர்த்தி வீட்டில் இல்லாத, பல்வேறு சமயங்களில், கள்ளக்காதலர்கள் இருவரும், போதும், போதும் என்ற அளவிற்கு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.அமலாவின்  குடும்ப வாழ்க்கை எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால், அமலாவின் கள்ளக்காதல் வாழ்க்கை திகட்ட ,திகட்ட உல்லாசம், இன்பம், சல்லாபம் என்று மிகவும் இனிமையானதாக இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில், அமலாவின் கள்ளக்காதல் விவகாரம், அவருடைய கணவர் விநாயகமூர்த்திக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவர், அமலாவை கடுமையாக கண்டித்துள்ளார். ஆகவே அதிர்ச்சி அடைந்த அமலா, இது குறித்து தன்னுடைய கள்ளக்காதல் ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.பின்பு, இருவரும் சேர்ந்து, விநாயகமூர்த்தியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

கள்ளக்காதலர்களான ரமேஷ், அமலா உள்ளிட்டோரின் திட்டப்படி, சென்ற 2016 ஆம் வருடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி, விநாயகமூர்த்தி மது குடித்துக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில், அமலா திடீரென்று, கருங்கல்லை தூக்கி விநாயகமூர்த்தியின் தலையில் போட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து போனார்.

தாலி கட்டிய கணவன் என்று கூட பார்க்காமல், கள்ளக்காதலனின் மீது இருந்த மோகத்தால், தானே கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, அதன் பிறகு, அமலாவும், ரமேஷும் சேர்ந்து, அருகில் உள்ள ஒரு கிணற்றில் விநாயகமூர்த்தியின் சடலத்தை தூக்கி போட்டுவிட்டு. அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில், அமலா தான் கணவரை கொலை செய்தார் என்ற விவகாரம் தெரிய வந்தது. ஆகவே கள்ளக்காதலர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த ஏழாண்டு காலமாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வழக்கு குறித்து, ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பில், கள்ளக்காதலர்கள் இருவரும் ,திட்டமிட்டு விநாயகமூர்த்தியை கொலை செய்தது மற்றும் ஆதாரத்தை மறைக்க முயன்றது என்று அனைத்திற்கும் சேர்த்து, இருவருக்கும், 15 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Next Post

திருப்பதியில் ஏன் முடி தானம் அதிகமாக கொடுக்கிறார்கள் தெரியுமா..? இது தெரிந்தால் நீங்களும் கொடுப்பீங்க..!!

Fri Sep 15 , 2023
நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் திருமலை திருப்பதி சன்னிதானமும் ஒன்று. ஸ்ரீஹரி விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றான திருப்பதி பாலாஜி, இந்த சன்னிதானத்தில் வெங்கடேஸ்வரராக வணங்கப்படுகிறார். அந்த விஷ்ணுவே இங்கு வெங்கடேஸ்வரர் வடிவில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த புனிதமான கோவிலில் பல சடங்குகள் மற்றும் மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான், தலை முடி தானம் அல்லது மடி தானம். இங்கு முடி தானம் செய்வது ஏன் தெரியுமா?. தற்போது அதனை […]

You May Like