அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக குறைபாடு ஏற்படுகிறது. பள்ளியின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது.
மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டிற்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மாற்றி அமைக்கப்படுகிறது. கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.