2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..
![தமிழகத்தில் புதிய வைரஸ் பாதிப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/03/corona-omicron-1024x576.jpg)
இந்த சூழலில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.. அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI அமைப்பும் தற்போது இதனை உறுதிப்படுத்தி இருந்தது..
சமீபத்தில் பாரிஸைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், சீனாவின் வுஹானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் தான் கொரோனா பரவியது என்று தெரிவித்துள்ளார்.. கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியது என்றும், தொற்றுக்கு ரக்கூன் நாய்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..
இந்நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் உஹான் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் ஆதாரங்களின் ஆய்வின் முதல் முடிவை வெளியிட்டுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதுகுறித்து பேசிய போது ” உஹான் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில், அவை காட்டு விலங்குகளின் மரப்பணுகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன்மூலம் கொரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் உஹான் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்வதற்கான சான்றுகள் அதிகமாகி உள்ளன..” என்று தெரிவித்துள்ளனர்…
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் விசாரணைகளுக்கு வரம்புகளை விதித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசியவில்லை என்று மறுத்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே தோன்றியதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் சில விஞ்ஞானிகள், வைரஸ் இயற்கையாகவே தோன்றி இருக்கலாம் என்றும், ஒரு விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..