fbpx

முக்கிய அறிவிப்பு…! வரும் மார்ச் 10-ம் தேதி வரை கால அவகாசம்…! இஸ்லாமியர்கள் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்கவும்…!

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாமா என அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ்‌ குழு சார்பாக தமிழ்‌ நாடு மாநில ஹஜ்‌ குழு, ஹஜ்‌ விண்ணப்பங்களை வரவேற்கிறது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி, 10.03.2023 அன்று முடிவடைகிறது.விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ மூலம்‌ அதாவது https://hajcommittee.gov.in/ என்ற இணையம்‌ வழியாக (அல்லது) மும்பை ஒந்திய ஹஜ்‌ குழுவின்‌ ‌செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில்‌ பதிவிறக்கம்‌ செய்வதன்‌ மூலம்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்‌.

ஹஜ்‌ 2023-ல்‌, விண்ணப்பதாரர்கள்‌ ஹஜ்‌ விண்ணப்பப்‌ படிவத்தை கட்டணம்‌ ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்‌. விண்ணப்பதாரர்கள்‌ அங்கீகரிக்கப்பட்ட கோவிட்‌-19-க்கு எதிரான இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்‌. இயந்திரம்‌ மூலம்‌ படிக்கத்‌ தக்க பாஸ்போர்ட்டின்‌ முதல்‌ மற்றும்‌ கடைசி பக்கம்‌, வெள்ளை பின்னணியுடன்‌ கூடிய சமீபத்திய பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌, உறைத்‌ தலைவரின்‌ இரத்து செய்யப்பட்ட காசோலை நகல்‌ அல்லது சேமிப்பு வங்கிக்‌ கணக்கு புத்தக நகல்‌ மற்றும்‌ முகவரிச்‌ சான்றின்‌ நகல்‌ ஆகியவற்றை பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

இந்த ஆண்டு, ஹஜ்‌ பயணிகள்‌ சென்னை புறப்பாட்டுத்‌ தளத்திலிருந்து ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ளலாம்‌. வாழ்நாளில்‌ ஒருமுறை மட்டும்‌ இந்திய ஹஜ்‌ குழு மூலமாக ஹஜ்‌ பயணத்தை மேற்கொள்ளலாம்‌ என்னும்‌ விதிமுறையை இந்திய ஹஜ்‌ குழு செயற்படுத்தி வருகிறது.

10-03-2023 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 03-௦2-2024வரையில்‌ செல்லக்‌ கூடிய இயந்திரம்‌ மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. ஹஜ்‌ 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ்‌ குழுவின்‌ இணையதள முகவரி https://hajcommittee.gov.in/ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

2000 பேருக்கு வேலை... எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராகும் தமிழ்நாடு... ஒப்பந்தம் கையெழுத்து!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு அரசு மற்றும் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

You May Like