fbpx

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…! எல்லாம் எச்சரிக்கையா இருங்க..! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மிகப்பெரிய அதிர்ச்சி... பிரபல பாடகி உடல் நலக்குறைவால் காலமானார்...! முக்கிய பிரபலங்கள் இரங்கல்...!

Mon Aug 22 , 2022
பிரபல பாடகி ராணி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மெல்லிசை ராணி நய்யாரா நூர் பாகிஸ்தானின் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. புல்புல்-இ-பாகிஸ்தான் என்ற புகழ்பெற்ற பட்டம் பெற்றவர். பழம்பெரும் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளைப் இவர் பாடலாக பாடியுள்ளார். நவம்பர் 3, 1950 இல் இந்தியாவில் உள்ள கவுகாத்தியில் பிறந்த அவர் 1957 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். […]

You May Like