பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இன்றைக்குள் இணைக்க வேண்டும்.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்பதால், விவசாயிகள் அவர்கள் பகுதிக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால் ஊழியர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெற வேண்டும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு https/pmkisangov.inadharekycaspx என்ற இணையதளம் அல்லது பி.எம்.கிசான் செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இதற்கு இணைக்க இன்றே கடைசி நாள் என மதுரை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் தெரிவித்துள்ளார்.