நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஒலப்பாளையத்தில் வசிப்பவர் பிரபாகரன். இவரது நார்மிலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாரம் மற்றும் மனைவி மனிஷாதேவி இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை தீஸ்குமார் எனபவர் உள்ளார். இந்த நிலையில், மனிஷாதேவி தனது குழந்தை தீஷ்குமாரை மடியில் வைத்து கொண்டே தேங்காய் நார் மில்லில் மிஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
மடியில் விளையாடிக் கொண்டிருந்த தீஷ்குமார் திடீரென ஓடிக்கொண்டிருக்கும் மிஷனின் பெல்ட்டில் கையை வைத்துள்ளார். சட்டென்று குழந்தை மிஷினுக்குள் இழுத்து சென்றது. தாயின் கண்ணெதிரே குழந்தை தீஷ்குமார் மிஷினில் சிக்கி உடல் நசுங்கியது.
இதனை தொடர்ந்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கே குழந்தை தீஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பரமத்திவேலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.