fbpx

#திருப்பத்தூர்: வீட்டின் உள்ளே செல்ல முயன்று மாடி ஏறிய கணவர் விழுந்து பலி.. உறக்கத்தில் இருந்த மனைவி..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அசதியில் தூங்கி கொண்டிருந்த புனிதா போனை எடுக்கவில்லை.

இதனால் விபரிதமாக யோசித்த தென்னரசு வீட்டின் பின்புறம் உள்ள பைப் லைன் வழியாக மூன்றாவது மாடிக்கு சென்று மாடிக்கு சென்றார். அப்போது தென்னராசா கால் தவறி தரையில் இருந்து கீழே விழுந்து தலையின் பின்பகுதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டிற்கு வராததால் புனிதா அண்ணனுக்கு போன் செய்தார். வீட்டிற்கு வந்த புனிதாவின் அண்ணன், தென்னரசின் மொபைலுக்கு அழைத்தார். வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டதும், உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது தென்னரசு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Baskar

Next Post

ரெட் கார்டு To பிக்பாஸ் டிராபி..!! கமலின் அரசியல் தலையீட்டால் டைட்டிலை வென்ற அசீம்..?

Mon Jan 23 , 2023
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டிலையும் தட்டிச் சென்றுள்ளார் அசீம். ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக வலம் வந்த அசீம் தான் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு பிக்பாஸ் டிராபி, ரூ.50 லட்சத்துக்கான காசோலை […]
ரெட் கார்டு To பிக்பாஸ் டைட்டில்..!! கமலின் அரசியல் தலையீட்டால் டைட்டிலை வென்ற அசீம்..?

You May Like