fbpx

செல்பியால் விபரீதம் ரயிலில் விழுந்து இருவர் பரிதாப மரணம்…..! திருப்பூர் அருகே சோகம்…..!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய்(24) இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் பணியாற்றி வந்தனர்.

ஆகவே நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர் திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மது பாதையில் வந்த 2 பேரும் தண்டவாளம் என்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த எர்ணாகுளம் பிலாஸ்பூர் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை கண்ட அந்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

கவர்ச்சியை கண்மூடித்தனமாக காட்டிய முன்னணி நடிகைகள்..!! தாராள உடைகளால் ரசிகர்களுக்கு கிடைத்த தரிசனம்..!!

Mon Jul 3 , 2023
கவர்ச்சி என்ற வார்த்தைக்கு மயங்காதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது உடம்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களும் மக்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதிலிருந்தே தெரிகிறது கவர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று. அந்த வகையில், கவர்ச்சியை காட்டினால் ரசிகர்களிம் கூட்டம் அலைமோதும் என்பதற்காக சில யுத்திகளை சினிமாவில் கையாள வேண்டியிருக்கிறது. அது ஒரு ஐட்டம் பாடலாக இருக்கலாம் அல்லது நடிகைகளிடம் […]
கவர்ச்சியை கண்மூடித்தனமாக காட்டிய முன்னணி நடிகைகள்..!! தாராள உடைகளால் ரசிகர்களுக்கு கிடைத்த தரிசனம்..!!

You May Like