fbpx

திருச்சி: பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு.! மெயின் ரோட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம்.!

திருச்சி நகரில் பெண் வங்கி ஊழியரிடம் தங்க நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி புஷ்பலதா(44). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் தனியார் வங்கியில் கிளர்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி இருக்கிறார்.

சாத்தனூர் சாலையில் இவர் சென்று கொண்டிருந்தபோது இவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் இவரது தலையில் அடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

எனினும் புஷ்பலதா தனது செயினை கெட்டியாக பிடித்திருக்கிறார். இதனால் அவரது தாலி செயின் பாதியாக அருந்திருக்கிறது. பாதி செயினை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் . இது தொடர்பாக புஷ்பலதா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. திருச்சியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

கோவிட்-19: வேகமெடுக்கும் கொரோனா.., 743 ஆக உயர்ந்த புதிய பாதிப்பு.! 24 மணி நேரத்தில் 7 மரணங்கள்.!

Sat Dec 30 , 2023
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு […]

You May Like