fbpx

தமிழக முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு!!! முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி..!

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுகதான் ஆனால் அதனை ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, மேலும் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி கடன் பெற்று அதனை அடைக்க சொத்து வரி, வீட்டு வரி, விலைவாசியை உயர்த்தியுள்ளதாகவும். கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பலே மேல் என உள்ளது” என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Kathir

Next Post

செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவுடன் உயிரிழப்பு காரணம் என்ன? போலீஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கு!

Wed Dec 21 , 2022
சென்னை பெரம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தினேஷ்குமார், கௌசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் சிறு,சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற தினேஷ்குமார், பேருந்தில் பயணம் செய்த போது சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like