fbpx

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? நாளை முதல் ஆரம்பம்..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால், நாளை முதல் உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும் வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தவர்கள் நாளை முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும்.

சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு ஆண்டில் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைககளை தொடர்ந்து நாளை முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற
https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பிக்கலாம்.

இ-சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் நாளை (ஜூன் 6) முதல் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒரு கிராமத்தையே ஆபாச படத்திற்கு அடிமையாக்கிய எலான் மஸ்க்..!! பெண்களிடம் ஆக்ரோஷத்தை காட்டும் இளைஞர்கள்..!!

English Summary

If you have applied for a ration card, good news is likely to come your way from tomorrow.

Chella

Next Post

"இதை செய்தால் மட்டுமே, ஆண்கள் திருமணம் செய்ய வேண்டும்..!!" - இந்த விசித்திர மக்கள் எங்கே தெரியுமா?

Thu Jun 6 , 2024
Only if they pass this dangerous test, should men marry.

You May Like