fbpx

என்னா குளிரு?… ஓடும் ரயிலில் தீமூட்டிய இளைஞர்கள்!… பரபர சம்பவம்!

குளிர் சமாளிக்க முடியாமல் அசாமில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் தீமூட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அலிகரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், “ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், ஓடும் ரயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Kokila

Next Post

இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.?!

Sun Jan 7 , 2024
இரவு உணவிற்கு பின்பாக பழங்கள் சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. அது உடலுக்கு ஏற்றதல்ல என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வாழைப்பழம் இரவு உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளக் கூடாது. இரவு உணவிற்கு பின்பாக எந்த ஒரு உடற்பயிற்சியும் நாம் செய்ய மாட்டோம் அப்படியிருக்க வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சத்து நம் உடலில் தங்கிவிடும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கும் என்று […]

You May Like