காதல் என்பது பல சாதி, மதம், இனம் என்ற பலவற்றை கடந்து தான் வருகிறது. இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களை காதலித்த நிகழ்ச்சி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரோலியில் நடைபெற்றுள்ளது. பரோலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார்.
அந்த இளம்பெண் அதே பகுதியில், வசித்து வரும் 2 சகோதரர்களை காதலித்து வந்துள்ளார். சிறிது நாட்களிலேயே இவர்களின் காதல் அபரீதமாக பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அப்பெண்ணின் தந்தைக்கு தெரிய வரும் நிலையில் மூவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று காவல் துறையினர் மூவரையும் தேடி வருகின்றனர். இதில், பெண் மற்றும் அவருடன் சென்ற இரண்டு சகோதரர்களையும் உயிருக்கு உயிராக காதலித்து இருக்கிறார் என்ற விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் இக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, மூவரும் ஒன்றுகூடி பேசி வீட்டை விட்டு நீண்ட தூரத்திற்கு சென்றுவிட முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி அண்ணன், தம்பி இருவரும் காதலியை தங்களுடன் அழைத்து சென்றனர். இரண்டு காதலர்களுடன் அந்த பெண் எங்கு சென்றார்? என்ற விபரம் இல்லை. இதனால் காவல் துறையினர் மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.