fbpx

கணவரை விட்டு வேறொரு நபருடன் வீட்டை விட்டு ஓடிய பெண்……! நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ச்சிகுள்ளான கணவன்…..!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் பரிதாபத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் கள்ளக்காதலன் மீது இருந்த அதீத மோகம் காரணமாக, அந்த பெண் கடந்த ஆண்டு தன்னுடைய கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆகவே ஜிம் பயிற்சியாளர் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும் அங்கே தன்னுடைய மனைவி வேறொருவருடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மனைவி சட்டதிறந்த காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் நீதிபதிகள் அந்த பெண்ணை கடந்த மே மாத 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி ஜிம் பயிற்சியாளரின் மனைவி தன்னுடைய கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீதிபதிகள் பங்கஜ் புரோஹித், மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தன்னுடைய விருப்பத்தின் பெயரில்தான் அந்தப் பெண் வேறொரு நபருடன் சேர்ந்து வாழ்கிறார் என கூறி இருக்கிறது.

ஆனால் ஜிம் பயிற்சியாளரின் வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்கு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருக்கிறார். இது போன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Next Post

அவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா…..! அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்……!

Wed Jun 21 , 2023
தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற திமுகவைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் தலைமை கழக நிர்வாகிகள் […]

You May Like