விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகில் மணிகண்ட ராஜா (வயது 24) அலெக்ஸ் பாண்டியன் (வயது 23) விக்னேஷ் (வயது 20) இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டத்தின் கீழ் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது பற்றிய வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சிறுமைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று பேருக்கும் 20 வருடங்கள் சிறை தண்டனை கொடுத்து தீர்ப்பு எழுதியுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு இழப்பீடாக அரசு 10 லட்சம் வழங்க பரிந்துரைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.