fbpx

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?… நீங்கள் பருக வேண்டிய பானங்கள் இதோ!…

அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கு அன்றாட உணவுப்பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சிறந்த தீர்வினை பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அந்தவகையில், கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது. வெள்ளரி சாறு பருகுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை குளிர்ச்சியடைந்து கூந்தல் வறட்சி தடுக்கப்படுகிறது. வெள்ளரி சாற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது.

கற்றாழை சாற்றில் அதிகளவு விற்றமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. இது, உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது. கீரை சாற்றில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் அதிகமாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்க மற்றும் கடத்த உதவுகிறது.ஃபெரெடின் என்ற கலவையும் கீரை சாற்றில் உள்ளதுடன், இது புதிதாக தலைமுடி வளர்வதற்கு ஊக்குவிக்கிறது.

Kokila

Next Post

குட்நியூஸ் சொன்ன கூகுள்!... மகிழ்ச்சியில் ஊழியர்கள்!... முழுவிவரம் உள்ளே!

Thu Mar 9 , 2023
கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது பணி மற்றும் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் சமீபத்தில் பணி நீக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. கூகுளில் வேலைக்கு சேர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த […]
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

You May Like