fbpx

e-Kyc இணைக்க வேண்டுமா…? விவசாயிகளே இன்று காலை 10:30 மணி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

மேலும் பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்துள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

Vignesh

Next Post

ஆதார் - வோட்டர் ஐடி இணைக்க மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம்…! செயலி மூலம் எப்படி இணைப்பது…?

Fri Feb 16 , 2024
இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி நிலையங்களில்‌ தங்களுடைய ஆதார்‌ […]

You May Like