fbpx

Watch Video | முன்னாள் காதலியை துடிதுடிக்க ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

முன்னாள் காதலியை நடுரோட்டில் வைத்து ஸ்பேனரால் இளைஞர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே உள்ள வசாய் சிஞ்ச்பாடா பகுதியில் ஆர்த்தி என்ற பெண் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவரது முன்னாள் காதலன் ரோஹித் யாதவ் என்பவர் பின்னால் வந்து ஆர்த்தியின் தலையில் ஸ்பேனரால் ஓங்கி அடித்தார். இதில், ஆர்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் தலையை உயர்த்த முயன்றபோது, ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார். இதில், ரத்தம் கொட்டி கீழே விழுந்தார்.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்த நிலையில், யாரும் தடுக்க முன்வரவில்லை. ஒருவர் மட்டும் தடுக்க முயன்றார். உடனே அந்த நபரை தள்ளிவிட்ட ரோஹித்,ஸ்பேனரால் அடிப்பேன் என்று மிரட்டினார். இதனால் அந்த நபரும் பின்வாங்கினார். பிறகு பயத்தில் ரோஹித்தை தடுக்க யாரும் முன் வரவில்லை. இந்த சம்பவத்தை சிலர் தங்களது மொபைலில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்… ஏன் அப்படி செய்தாய்?’ என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான். இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குற்றவாளி ரோஹித்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆர்த்தி ரோஹித்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதாக தெரிகிறது. அதோடு, ஆர்த்தி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் கோபத்தில் இது போன்று நடந்து கொண்டதாக போலீசாரிடம் ரோஹித் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : கணவன் இறந்த பின் மகனுக்கு வரும் சொத்தில் தாய்க்கும் பங்கு இருக்கிறதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

The incident of a young man beating his ex-girlfriend to death with a spanner in the middle of the road has caused a shock.

Chella

Next Post

விவசாயிகளே..!! வந்தாச்சு ரூ.2,000..!! உங்கள் வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!!

Tue Jun 18 , 2024
Prime Minister Modi released Rs 20,000 crore as the 17th installment to the beneficiaries of the PM Kisan scheme at a thanksgiving ceremony in Varanasi.

You May Like