fbpx

“ உடனே ஒப்புதல் வேண்டும்..” அவசர அவசரமாக டெல்லி சென்ற சி.வி. சண்முகம்..

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும், அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.. மேலும் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன.. 97%-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இதனிடையே ஓபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த புகாரில் ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல் வெளினது.. மேலும் ஓ. பன்னீர்செல்வம் அளித்த புகாரும் பரிசீலனையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆவணங்களை பரிசீலித்த பிறகு, இரு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது..

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் நேரில் சென்று சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ளார்.. பொதுக்குழு முடிவுகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் விரைவாக ஒப்புதல் பெற வேண்டும் என்ற நோக்கில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.. அதிமுக விதிகளில் மாற்றம் என்பது ஒரு மித்த முடிவு என்றும் 90% பொதுக்குழு உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பொதுக்குழு முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்..

Maha

Next Post

’அதிமுகவின் பொதுச்செயலாளராக ஸ்டாலின் கூட ஆகலாம்’..! டிடிவி தினகரன் விமர்சனம்

Wed Jul 13 , 2022
’திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிட முடியும்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக, ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ (எடப்பாடி பழனிசாமி) மாதிரி செயல்படக் கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். ஜாதி, மத பேதமில்லாத அதிமுகவில் ஜாதி, மத அரசியல் செய்து அனைவரையும் தன் […]
’2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் வரும்’..!! எடப்பாடி பழனிசாமி

You May Like