தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்ற வானிலை இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் கன மழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 5ம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தலைநகர் சென்னையில் இரு தினங்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று தெரிவித்து இருக்கின்ற வானிலை ஆய்வு மையம், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகலாம் என்று கூறியுள்ளது