fbpx

கேரள பெண்கள் அழகாக இருப்பதற்கு காரணம் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்..!

இந்தியாவிலேயே கேரளத்து பெண்கள்தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றனர். பொதுவாகவே எல்லா ஆண்களுக்கும் கேரள பெண்களை நிச்சயம் பிடிக்கும். “இயற்கையிலேயே பெண்கள் அழகுதான்” என்றாலும், அந்த தேவதைகளின் அழகு பற்றிய இயல்பான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்.

கேரள பெண்களின் அழகு ரகசியங்கள்: கேரள மாநிலம் இயற்கை வளம் சூழ்ந்து காணப்படும் ஒரு அழகான இடம். இயற்கை அழகு அம்மாநில பெண்களுக்கு இயல்பாகவே அழகை தருகிறது. சந்தன பொட்டு வைத்து பாரம்பரியமாக வெள்ளை சேலை உடுத்துவது அவர்களின் அழகை தனித்துவமாக காட்டுகிறது. ஆண்கள் அதிகம் விரும்பும் வெள்ளை நிறத்தை கேரள பெண்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள்.

இயற்கையான நறுமன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து, மேனி அழகை பராமரிக்கும் வழக்கம் கொண்டவர்கள். வட்ட முகமும், குவிந்த கன்னங்களும், பார்ப்பவர்களை பளிச்சென்று ஈர்க்கும் கண்களும் இவர்களை தேவதைகளாக காட்டுகிறது. மஞ்சளும், கடலை மாவும் இவர்களின் முக்கிய மேக்கப் பொருள்களாகும். இதனால் சருமத்தில் எண்ணெய் வடிவதில்லை. நீளமாகவும், அடர்த்தியாகவும் கண்ணைக் கவரும் கருமை கூந்தல் இவர்களின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. சீகைக்காய் குளியல், தேங்காய் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளதாக தகவல். (ஷாம்பு போடுவதில்லையாம்)

செயற்கையாக கடையில் விற்கப்படும் வேதிப்பொருள் கலந்த காஜலை பயன்படுத்தமாட்டார்களாம். இயற்கையாக வீட்டிலேயே காஜலை தயார்செய்து கண்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கேரளாவில் நீர்வளம் அதிகம் இருப்பதால் காற்றில் ஈரப்பதம் கலந்து வெப்ப சலனத்தை குறைத்து சரும பாதிப்புகளை தடுக்கிறது. கேரள பெண்களின் அழகிற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

Maha

Next Post

குறட்டை வராமல் நிம்மதியாக தூங்க இத பண்ணுங்க..!

Wed Aug 9 , 2023
அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று தூக்கம். அந்த தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அந்த தூக்கத்தின் போது அருகில் இருப்பவர்கள் குறட்டை விடுவதால் அவர்களின் தூக்கம் குறைந்துவிடுகின்றது.இது சில சமயங்களில் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும். ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்தால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தவறான கருத்து. நம் சுவாசிக்கும் பாதையில் மென் […]

You May Like