fbpx

’போதும் போதும் என சொல்லும் அளவிற்கு அப்டேட்டுகளை அள்ளித்தரும் வாட்ஸ் அப்’..!! இப்போது என்ன வந்திருக்கு தெரியுமா..?

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தற்போது மெட்டா நிறுவனம் புதிய அப்பேட்டை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் நம் அனுப்பப்படும் மெசேஜ்களின் Text Size-ஐ நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது Windows மூலமாக வாட்ஸ் அப் பயன்படுத்தும் போது எழுத்துக்களின் வடிவத்தை தேவைக்கு தகுந்தார் போல் மாற்றம் செய்து கொள்ளலாம். அதன்படி, எழுத்துக்களின் வடிவத்தை பெரிதாக்குவதற்கு ctrl + ஆப்ஷன், எழுத்தின் Text வடிவத்தை பெரிதாக்க பயன்படுத்தலாம்.

மேலும், எழுத்துக்களின் வடிவத்தை குறைக்க ctrl – மூலம் மீண்டும் பழைய size-க்கு மாற்றலாம். இந்த புதிய அப்டேட் தற்போது windows பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, Standard Qulaity, HD Quality என்ற 2 ஆப்ஷன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

பொதுவாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. அதனால் Document ஆப்ஷனை பயன்படுத்தி தான் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி வருகிறோம். இதனை எளிதாக்கும் வகையில், Standard Qulaity, HD Quality ஆப்ஷன்கள் மூலம் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இனி காவலர்கள் விடுமுறை கேட்டால் கொடுத்து விடுங்கள்’..!! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Sun Jul 9 , 2023
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல், தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டியதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் மரணம், தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விஜயகுமார் கடந்து சில நாட்களாகவே […]

You May Like